பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே கண்ணிர்த்துளி O பொற்புடைச் செல்வி பூம்புகார்த் தலைவி கற்புடைத் தெய்வம் கண்ணகி கொழுநனைத் தீதிலாச் செம்மலைத்திருடன் எனப்பொய் ஒதிய உரைகேட் டோரா மன்னவன் கொன்றனன் என்றதோர் கொடுமொழி செவிபுக மன்றம் சென்றனள் வழக்கினில் வென்றனள்; கன்றிய நெஞ்சங் கலங்கிய கண்ணகி துன்றிய கண்ணிர்த் துளிகளைச் சிந்தினள்; அன்றவள் சிந்திய அவலக் கண்ணிர் கொன்றது மதுரைக் கொடுங்கோ லரசை அல்லல் தாங்கா தழுத கண்ணிர் மல்லல் வயல்சூழ் மாநில மன்னர் செல்வம் தேய்க்கும் செறுபடை யாமெனச் சொல்லும் திருமறைச் சொற்பொருள் மெய்யே எளியவர் சிந்தும் விழி நீர்த் துளிகள் ஒளிவிடும் வாட்படை ஒக்கும் என்பர்; ஆம் ஆம் அத்துளி அத்துணை யாற்றல் தாமே பெற்றுள தன்மையை அறிகுவம்; 71