பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே படியர சோச்சும் பான்மையைப் பெற்ற முடியர சாகினும் குடியர சாகினும் கொடுங்கோ லோச்சுங் குறிப்பினைக் காட்டிற் சுடுங்கோ லாகும் சொட்டுங் கண்ணிர்! வெந்துயர் பொறாது சிந்திய விழிநீர் செந்தழலாகிச் சிதறிப் பரவும்; சுவைபட முன்பு சொன்னதை மறந்து புவியர சாள்வோர் புகுத்திய வஞ்சப் பொல்லாங் கனைத்தும் பொசுக்கும் நசுக்கும்; நல்லோர் ஆட்சி நாட்டினில் மலர்த்தும்; அரியணை யமர்வோர் ஆய்ந்துளங் கொள்க; நெறியறி மாந்தர் அறிவுரை யதனைச் செவிபுக விடுக; செற்றமுங் கலாமும் தவிர்க தவிர்க; தந்நலம் விடுக; கொலையுங் களவும் நிலைபெறல் காணின் அலைவுறும் எமதுளம் ஆறாது துடிக்கும் விழிகள் கனன்று வெந்நீர் வடிக்கும் விழிநீர் வடிப்பும் வெந்துயர்த் துடிப்பும் அழித்தே அமையும் அதனெதிர் ஒன்றிலை; விழித்தனர் மாந்தர் விளையாட் டயரேல்; செருக்கும் தருக்கும் பெருக்கு வீராயின் நொறுக்கும் அவைநுமை நொடிப்பொழு ததனில் பொதுநலக் காவலர் பொறுப்பினை ஏற்றவர் எதுநலம் எனவுணர்ந் தேத்துக கோலே, { 72 *l