பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே நாட்டினை உயர்த்தும் மாந்தச் உழைப்பினை நல்கல் மட்டும் கேட்டினை அகற்று மென்று கிளத்திலேன்; செல்வம் அள்ளிப் போட்டவர் நெஞ்சும் சற்றுப் புது ைமயிற் பொருந்தல் வேண்டும் மேட்டுயர் வாழ்க்கை யொன்றே மேன்மையென் றெண்ணல் வேண்டா உடலினை வருத்தி இந்த உலகினைக் காக்கும் மாந்தர் படுதுயர் கண்டும் நெஞ்சிற் பரிவொடும் அனுக லின் றிச் சுடர்தரும் உழைப்பை யெல்லாம் சுரண்டியே வாழ எண்ணின் அடகெடும் வாழ்வை நீங்கள் அடையும் நாள் தொலைவில் இல்லை அடிமுத லாகத் தங்கள் அயர்விலா உழைப்பை வைத்தோர் மிடிபடத் துயரில் வீழ்ந்தால் மேவிடும் புர்ட்சி திண்ணம்; அடியொடு சுரண்டும் ஆசை அகற்றிடல் வேண்டும்; இந்தப் படியுணர்ந் துரிய பங்கைப் பகிர்ந்தளித் திடுதல் வேண்டும். 76