பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே எழுத்துலகம் Ο சதைப்பசிக்குத் தீனியிடும் சங்கரிகள் கூட்டத்தார் தடித்த நெஞ்சால் {{ எதைக்கெடுத்தும் எழுதுகிறார் எதைக்கெடுத்தும் வாங்குகின்றார் இளைய நெஞ்சை; கதைப்படைப்பாம் ஐயஓ காமத்தின் படைப்பைத்தான் காட்டு கின்றார் அதைப்படிக்கும் சிறுவர்க்கும் ஆசையைத்தான் தூண்டுகின்றார் அனைத்தும் விட்டோர் எழுத்தாளர் கைகளிலே இருப்பதெல்லாம் எழுதுங்கோல் என்று கூறேன் பழுத்தோர்கள் வளர்த்துவிடும் பண்பாட்டுப் பயிர்களெலாம் பாழாய்ப் போகக் கழுத்தறுக்க வைத்திருக்கும் கருக்கரிவாள் என்றுரைப்பேன்; காமத் தீயில் பழுக்காது காய்ச்சியிளம் பிஞ்சுள்ளத்தில் பாய்ச்சுகிற சூட்டுக் கோலாம், 78