பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F நெஞ்சு பொறுக்கவில்லையே ". . . . . . . . . . ,--

அவளுக்குக் காதலன்யார்? அழகிமனத் தவ்வுணர்ச்சி அரும்பா? காயா? எவனுக்கு மாலையிட எண்ணுகிறாள்? பருவமகள் என்ன வானாள்? அவளொருவன் மனைவியென ஆனபினும் மற்றவன்மேல் ஆசை வைக்குந் தவறுக்கேன் ஆளானாள்? தனதெழிலால் கவர்ச்சிமிகும் தையல் யாவள்? பத்திரிகை தாங்கிவரும் பாழ்பட்ட வினாக்களிவை, பதிலும் ஏந்தும்; இத்துறையில் வினாவிடைகள் எழுமானால் குமுகாயம் இழிந்து விட்ட அத்துயர்தான் மிஞ்சிவரும்; அவனுக்கோ காசுவரும்; ஆக்க நோக்கில் எத்துறையில் ஐயங்கள் எழவேண்டும்? அத்துறையில் எழவே யில்லை. நச்சுமிழும் வினாக்களுக்கு நல்லவரா விடையளிப்பர்? நஞ்சு தன்னை எச்சமயம் புகுத்திடலாம் எனப்பார்க்கும் இழிந்தவரே இதனைச் செய்வர்; அச்சமிலார் நாணமிலார் அரிவையர்தம் கதைசொல்லி ஆள்கள் சேர்க்கும் காச்சைமனங் கொண்டவர்கள் குமுகாயங் கெடுப்பத்ற்குக் கூச மாட்டார். . む"、" 、・・