பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே குடும்பத்தில் மறைவிடத்தில் கூடிமகிழ் பொழுதத்திற் குலவல் பற்றி நடும்வித்தின் அளவேனும் நாணமிலாள் வழியொன்று நாடிக் கேட்பாள்; கெடும்வித்தை கற்றவனும் கேள்விக்கு விடையளிப்பான்; கீழ்மை யில்லாக் குடும்பத்தாள் குலவுவதற்குக் குறிப்புகளை மற்றவனா கொடுக்க வேண்டும்? "நடிகைக்குக் கணவன் யாா? நள்ளிரவில் என் செய்வாள்? நாடும் என்பாற் - 1 படிகைக்கு வருவாளா? பாவைக்குத் தொகையென்ன ? படுக்கை தொந்து os விடிக்கைக்கு வாடுகிறேன் வினவு கிறேன் ア விடை சொல்லும் வீனன் 2இந்தப் படிகைக்கு வந்ததெலாம் வரை கின்றான் போழிதழார் பதிலும் சொல்வார். அழகிக்கு மணவாளர் எத்தனை பேர்? யாரிடத்தில் அவளுக் காசை? பழகுவதற் கினியவளா? படுக்கையிலே ஒருசாய்ந்து படுப்ப துண்டா? எழிலிக்கு வயதென்ன? எடையென்ன? இரவிலவள் உண்ப தென்ன? தொழிலுக்கு வாங்குகிற தொகையென்ன? உடுத்துகிற துணிக ளென் ன? 30% 3. ,arsrror, 2. இந்தப்படி கைக்கு orsرده - ما - .1 பாழான பத்திரிகையாளர். 81.