பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே திருமணச் சந்தை O கனிமுதற் பொருள்கள் யாவும் விற்றிடுங் கடைக ளுண்டு நுனிபடுங் கொம்பு மாடு நுவல்விலைச் சந்தை யுண்டு மனிதனை விற்குஞ் சந்தை மற்றுமொன் றுண்டு கண்டீர்; இனிஅவன் உயர்தி னைக்குள் இயம்புதற் குரிய னாகான் மருள்படும் மனிதன், பெற்ற மகனையே விலைக்கு விற்று வருதலைக் கானு கின்றேன் வதைபடும் மனத்த னானேன் பெருகிய குமுகா யத்திற் பிணிதரு புழுவே யானான் திருமணச் சந்தை யென்று കൊ திரிகின் றானே - . 86.