பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜி. நெஞ் சு பொறுக்கவில்லையே பழித்தும் இழித்தும் பகர்ந்து வாழ்வை மறுத்துப் பேசி வெறுத்தலும் உண்டு; "நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம்' எனவும் மொழிந்தனன்; அதனால் நீந்தும் முயற்சியை நீத்தனன் ஆழ்ந்தனன்; "பெரியோரை வியத்தலும் இலமே தம்மிற் சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” எனுமொழி அவன்றன் ஏற்றமுங் காட்டும்; மனத்துறு பண்புடன் மான முங் காட்டும். எனினும் ஒருவரை ஏற்றிப் புகழ்ந்து தனிநலம் ஒன்றே தகுமெனப் பேணித் தனித்திறங் காட்டுவன்; தாழ்த்த நினைப்பின் இவன் போற் பிறரை இகழ்வதில் பழிப்பதில் இனிமேல் யாண்டும் எவனும் பிறவான் திககல் வழியும் தேதிகர் மொழியும் નીy ஓதிக் கெட்டவன் இவன்போல் இலனே உரைத்த குறிக்கோள், நடத்தும் வாழ்க்கை இணைத்து நோக்கின் இரண்டும் தனித்தனி; நினைதொநீம் நினைதொரும் நெட்டுயிர்ப் புயிர்த்து y/ நனிபட ரெய்தி நலிவுறும் மனனே. 85