பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே படிப்பும் நடப்பும் O படைத்துவைத்த நீதிகளுக் கேதடா பஞ்சம்? படித்தவன் தான் நாணமின்றிச் செய்கிறான் வஞ்சம் கொடுத்துவைத்த பொருளிருந்தும் ஏனடா பஞ்ம்ே? குறுக்குவழி நடப்பதனால் என்னடா மிஞ்சும்? நடுநிலைமை கொண்டுநட வாழ்க்கையி லென்றார் நடைவழியில் ஒரமறிந் தேகிடச் சொன்னார் கெடுவழியே நாடுபவன் மாறி நடந்தான் கீழ்மகனாய் நல்வழியை மீறி நடந்தான் ச/ பிறர்பொருளைத் தன் பொருள் போற் போற்ற மொழிந்தார் பேதையிவன் அப்பொருளை மாற்ற நினைந்தான் எவர்பொருளுந் தன் பொருளே என்று நடந்தான் எதையுமிவன் ஏப்பமிட வாயைத் திறந்தான் உள்ள மதில் மாசகற்ற ஓதி யறிந்தான் உடல்தனையே துய்மைசெய நாளும் முயன்றான் கள்ளவழி தானறிந்து செல்ல நினைந்தான் கற்றதெலாம் காற்றில் விட உள் ளம் விழைந்தான் தத்துவங்கள் வித்தகங்ாள் கூட்டி யெடுத்தான் தான் படித்த வித்தைகளைக் காட்டி முடித்தான் புத்தகங்கள் அத்தனையும் வீசி யெறிந்தான் புன்மைகளைத் தான் பிடித்தே வாழ நினைந்தான். 90