பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைப்புகளில் அளிக்கப்பட்ட விளக்கங்களின் தொகுப்பை ஒரு நூலாக்கிச் சிலம்பொலி' என்ற தலைப்பில் வெளியிட்டேன். திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் தமிழர் வரலாறு' என்ற ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்தும், இடைஇடையே, அவர் கூறும் சில கருத்துக்கள் முரண்பட்டனவாகப் புலப்பட, அவற்றைத் திறனாய்வுசெய்து பின் இணைப்பாக வைத்தும், 'தமிழர் வரலாறு. மொழி பெயர்ப்பும் தி ற ன ய் வு ம்’ என்ற தலைப்பில், திருமாவளவன்', 'புலவர் வரிசை', 'அரசர் வரிசை’, என்ற 23 நூல்களை வெளியிட்டு, 1951.லேயே என்னையும் ஓர் எழுத்தாளனாகத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்துவைத்த பெருமைக்குரிய கழக வெளியீடாக’, என் ஐம்பதாவது படைப்பாக வெளியிட்டேன்.

சங்க இலக்கியப் பாக்களின் தொகுப்புகளாகிய, பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, வரிசையிலே, எட்டுத்தொகையில் சில நூல்களின் திறனாய்வு செய்து வெளியிட்ட எனக்கு அவ்வரிசையில் முதற்கண் வைத்து போற்றப்படும் பத்துப் பாட்டுப் பாக்களின் திறனாய்வு செய்ய வேண்டும் என்ற வேட்கை எழுந்தது இயல்பே. அவ்வேட்கையால் உந்தப்பட்ட நான் 782 அடி முதல் 103 அடிவரை உள்ள அவ்வரிசையுள், அடியளவால் சிறியதாய, 'முல்லைப் பாட்டினை' முதற்கண் திறனாய்வு செய்து, 'முல்லை' என்ற தலைப்பில், கழக வெளியீடாக வெளியிட்டேன், அடுத்து பத்துப்பாட்டுள் ஏழாவதாகத் திகழும் ,நெடுநல்வாடை பாடல் வரிகளைத் திறனாய்வு செய்து 'மனையுறை புறாக்கள்' என்ற தலைப்பில் எழிலகம் பதிப்பக வெளியீடாக வெளியிட முன் வந்துள்ளேன். - -

என் முன்னைய படைப்புகளுக்கு நல்லாதரவு தந்த, தந்து வரும் தமிழ் கூறு நல்லுலகம் இதனையும் இதைத் தொடர்ந்து வரும் பத்துப்பாட்டு வரிசை விளக்கவுரை நூல்களையும் ஆதரித்து ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

கா. கோவிந்தன்,

モァ**