பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருவிளங்கு தமிழ்மொழியின் மருங்கு

எழுந்தது என விளங்கும் திருவிளங்கு வள்ளுவர் திருக்குறள் கண்டவர்

அடியாய்ச் சிரமேற்கொள்வார்.

என்ற பாடலை எல்லோருமாகப் பாடுவோம்.

1934-இல் பள்ளி இறுதி வகுப்பை முடித்ததும் அவர் தந்த பயிற்சியின் துணையால் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களை நானே படிக்கத் தொடங்கினேன்.

1935-இல் 'காவிரி’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதி, தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச்சங்கத் திங்கள் வெளியீடாகிய 'தமிழ்ப் பொழிலு' க்கு அனுப்பினேன். அது வெளிவந்த பிறகே ஆசிரியர்க்குத்தெரியும். இதுவே என் எழுத்துப் பணியின் தெடக்கம்.

ஊரில் வாகீச பக்த ஜனசங்கம்” என்ற பெயரில் ஒரு தமிழ்ச்சங்கம் இருந்தது. அது மேலே கூறிய திருக்கோயில் திருவிழா ந ைட .ெ ப ற் ற தைத் திங்களில் பத்துநாட்கள் உபயச் சொற்பொழிவு நடத்தி வந்தது. ஒளவை அவர்கள் பங்கு கொண்டதும், அது புதுநடை போடத் தொடங்கி விட்டது. த மி ழ் த ட் டி ல் உள்ள திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் உள் ளி ட் ட பலசமயப் புலவர்கள் வந்து சொற்பொழிவு ஆற்றுவார்கள். அவர்கள் பேசியன எல்லாம் கேட்ட எனக்கும் நாமும் ஏன் பேசக்கூடாது' என்ற உணர்வு எழவே, ஆசிரியர் அறிவுரையோடு "சைவ இளைஞர்கள் முன்னிருக்கும் கடமைகள்' என்ற தலைப்பில் பேசினேன். அதுவே என் முதற் பேச்சு.

108