பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் ஊரில் 'பானு கவி மாணவர் தமிழ்ச் சங்கம்’ என்ற பிறிதோர் அ ைம ப் பும் இருந்தது. கம்ப இராமாயணத்தை ஆழ்ந்து படிக்காமலே பட்டிமன்றம், வழக்காடு மன்ற மேடைகளில் நின்றுகொண்டு வெறும் சொல் சாலம் காட்டுவார்போல் அல்லாமல் ஆழமாகப் படித்து 'வாலி வழக்கு’ என்பனபோலும் அரிய நூல்களைப்படைத்த அமரர் திரு. புரிசை முருகேச முதலியார் போன்றவர்கள் பானு கவியாரின் மாணவர்கள். அவர்கள் உருவாக்கியது அச் சங்கம். அதிலும் நான் பங்கு கொண்டவன்தான்்; ஆண்டு தோறும் திருவத்திபுரத்திற்கு வந்து செல்லும் ஞானியார் அவர்கள் அயர்ந்து உறங்கத்தொடங்கும்போது, அவர் உறங்கும்வரை அவர் கால்களைப் பிடித்துவிடும் பழக்கமுடைய என்னை, ஒருமுறை அவர் தலைமையில் 'மணிவாசகர் அளித்த திருவாசகம்’ என்ற தலைப்பில் பேசுமாறு பணித்து விட்டார்கள். சங்க இலக்கியங்களை ஒரளவு கற்றவனே அல்லது, சமய இலக்கியம் படித்தவன் அல்லன். ஆனாலும் திருக்கோவையாரில் ஒரு சில பாக்களைப் பள்ளியில் படித்தவன். என் தந்தையார், மார்கழி மாத விடியற்போதில் படிக்கும் திருவாசகப் பாக்களைப் கேட்டுக் கேட்டுச் சில பாடல்களை நினைவில் வைத்திருப்பவன். அதனால் தன் மகள் அவள் விரும்பும் இளைஞனோடு அவள் சென்றுவிட்ட போது, அவர்களைத் தேடிச்சென்ற தாய், எதிரே வந்த ஓர் இள ஆணையும், ஒர் இள மகளையும் அணுகி, உங்களைப் போன்ற இருவர் இவ்வழியில் செல்வதைக் கண்டிர்களா எனக்கேட்க, அதற்கு அந்த இளைஞன், ஒன்று இருவரையும் பார்த்தேன் அல்லது இல்லை என்று கூறியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக ‘என்னைப்போன்ற இளைஞரைப் பார்த்தேன்” எனக்கூறிவிட்டுத் தன்பக்கத்தில் நிற்கும் தன் காதலியைப் பார்த்து 'இந்த அம்மா, வேறுயாரோ ஒருவரைப்பற்றிக் கேட்கிறார்களே! அ வர் க. ைள ப்ப ற் றி உனக்குத் தெரியுமா? ' எனக் கேட்டதாக வரும்.

109