பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

13



புளிய மரத்தடியில் போய் கள்ளச் சாராயம் குடிக்கும். அவரை, ஊரார் கில்லாடியார் என்பார்கள். வசதியுள்ளவர் என்பதால் ஆர். மீதி மூன்று பேரும் உதிரிகள். அதே சமயம், உடம்பைப் பொறுத்த அளவில் உறுதியான வர்கள். தமிழரசியின் முன்னால், உடம்பின் ஒவ்வொரு அங்கமும் லாக் அவுட் செய்வது போல் துடிதுடித்து நின்றவனுக்கு, ஊரார் ஊட்டிய பெயர் மண்டையன்.” இருபத்து நான்கு வயதுள்ள அந்த உள்ளுர் டெய்லருக்கு, தலையின் பரப்பளவு அதிகம். எப்போதும் தையல் தொழிலை விட்டு விட்டு, “தையல்களை பார்ப்பதையே, தொழிலாகக் கொண்டவன். வெள்ளை ஜிப்பாவும், கறுப்பு. லுங்கியுமாக அலைபவன்.

அனைவரும் அரை நிமிடம் பேச்சற்று நின்றபோது, வினைதீர்த்தான், வக்காலத்துக்களை அலட்சியமாகப் பார்த்தபடியே, ‘உ.ம்...சீக்கிரம் என் தங்கச்சிகிட்ட மன்னிப்புக் கேளு...நீயாய் கேட்காட்டால், ஒன் தலை மட்டும் தனியா அவள் காலுல உருளும்” என்றான் உறுமியபடி

கில்லாடியார் இரண்டடி முன்னால் நடந்து டேய், வெனதீர்த்தான், அவனை அடிச்சால், என்னை அடிச்சது. மாதிரி என்றார். வினைதீர்த்தான் அதைக் கண்டு கொள்ளாமல், மண்டையனைப் பார்த்து “ஏல..நீயா அப்படிப் பேசினியா, இல்ல எந்த தேவடியா மவனும் ஒன்னை அப்படிப் பேசச் சொன்னானா? உள்ளதைச் சொல்லு’ என்று சொன்னபடியே, மண்டையனின் பிடரியில் அடிக்காமலே தன் கையை வைத்தான்.

கில்லாடியார், மூவர் புடைசூழ மண்டையனை மீட்கப்போனார். இதற்குள் தமிழரசியின் தந்தை அருணாசலம் கர்ஜித்தார்.