பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



V

ஆசிரியர் கதை மாந்தர் கூற்றாக ஆங்காங்கே சுட்டிச் செல்லும் சில நடைமுறை இலக்கிய விவகாரங்கள் தேவையற்றவை; சிலவற்றில் எனக்கு உடன்பாடும் இல்லை. “தக்காரும் மிக்காரும் இல்லாத தனிப்பொருள் (தனிப் பெரும்) படைப்பாளியான விந்தன் திறனாய்வாளர்களாலும் முட்டாள் வாசகப் பரப்பாலும் அமுக்கப்பட்டு விட்டதாக (பக்., 117) சமுத்திரம் குற்றம் சாட்டுகிறார். யாரும் யாரையும் அமுக்கிவிட முடியாது. திறமான புலமையெனில் எத்தனை பேர் சேர்ந்து அமுக்கினாலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விடும் ஆற்றல் அதற்கு உண்டு.

V

இறுதியாக ஒரு குறிப்பு

நம் நாட்டுப் புராணங்கள் சிலவற்றில் வடமுகாக்கினி என்பது பற்றிச் சில குறிப்புகள் வருகின்றன.

வடமுகாக்கினி என்பது குதிரையின் முகம் போன்ற வடிவுடைய தீ! அது சமுத்திரத்தின் உள்ளே இருந்து புறப்பட்டு மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறதாம். அது முழுமையாக வெளிப்பட்டு விட்டால் மகா பிரளயம். நிகழ்ந்து புதிய உலகு தோன்றுமாம்.

“சமுத்திரத்'தின் நெருப்புத் தடயங்களை நான் ஒரு. வடமுகாக்கினியாக உருவகம் செய்து பார்க்கிறேன்.

ஒரு மகத்தான சமுதாயப் புரட்சியையும், அதன் விளைவான புதிய உலகத்தையும் நமக்கு நினைவூட்டி நம்பிக்கை கொள்ளச் செய்கிறார் சமுத்திரம்!

தோழர் சமுத்திரம் வாழ்க! அவரது இலக்கியப் படைப்புகள் வெல்க!