பக்கம்:பச்சைக்கனவு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபூர்வ ராகம் C 25

வரைக்கும் கொடுத்து சப்பிய பொழுதுதான் எனக்கு நிம்மதி ஆயிற்று. இதுவும் ஒரு மிருகம்தான்.

மிருகம்! மிருகம்!! எத்தனை தடவை சொன்னாலும் அலுக்க மாட்டேன்கிறது. உயர்ந்த ஜாதிக் காட்டுமிருகம். நின்றவிடத்தில் நிற்கமாட்டாள். உடலையும் உள்ளத்தை யும் மிஞ்சிய வேகம் அவளை அலைத்தது.

நாவற் பழம்போன்று பளபளக்கும் கண்களும், இயற்கையாகவே காரியங்களிலும், உடலிலும் விறு விறுப்பும் சிற்சில சமயங்களில் உலகத்தின் மெதுவைத் தாங்கப் பொறுமையற்று முகம் சுளிக்கையில் அதில் குறுகுறுக்கும் களையும்.

தொம்பங்கூத்தாடி சாட்டை போல் தடித்து, முழங் காலுக்கும் கீழ் தொங்கும் பின்னலும்.

அபூர்வ ராகத்தின் ஜீவஸ்வரமாய் அவள் கூந்தல் விளங்கிற்று. பின்னாது வெறுமென முடிந்தால் ஒரு பெரும் இளநீர் கனத்துக்கு கழுத்தை அழுத்திக் கொண்டிருக்கும். பின்னலை எடுத்துக்கட்டினால், கூடை திராகையை அப்படியே தலையில் கவிழ்த்தது போலிருக்கும். நாங்கள் எப்படியும் தெருவில் போனால், திரும்பிப் பாராதவர் இல்லை. அதுவே லஜ்ஜையை உ ண் டு பண் ணு ம். அம்மாவுக்கு அம்மயிரைப் பின்னப் பின்ன ஆசை. விதவிதமாய்ப் பூ வாங்கி வைத்துப் பின்னுவாள். பின்னி முடிவதற்குள் தோள்பட்டை விட்டுவிடும். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஒருபாடு. தலைக்கு மாத்திரம் எண்ணெய் தனியாய்த் தேய்த்து, துணி துவைப்பதுபோல் அம்மிக்கல்வின் மேல் கூந்தலைக் குமுக்கி ஒரு கட்டையால் எண்ணெய்விட அடித்து அலசுவாள். உலர மறுநாளாகும். கூந்தலை முடித்துப் படுக்க இயலாது. முடிச்சை அவிழ்த்துக் கட்டிலுக்கு வெளியே தொங்கவிட்டுத்தான் படுக்கவேண்டும்.

ஓரிரவு விழித்துக் கொண்டேன். மயிர் பெருந்தோகை காய் படர்ந்திருந்தது. மெதுவாய்த் தொட்டேன். சரியாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/34&oldid=590692" இலிருந்து மீள்விக்கப்பட்டது