இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அம்முலு O 63
விட்டாளோ, அல்லது இன்னமும் என்றாவது ஒரு நாள் அவள் கணவன் திரும்பி வருவான் என்னும் நம்பிக்கையில் தான் இன்னும் ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கிறளோ?’’
அறைக்கு வெளியே யாரோ போகும் அரவம் கேட்டது. பாஸ்கரன் எட்டிப் பார்த்தான்.
அம்முலு புதுப்புடவை சரசரக்க வான வீதியில் மிதந்து சென்ற நீலப்பொறிபோல், அதிசயக் கனவு கண்டு இன்னும் அதனின்று விழித்தெழாத கண்களுடன், புன்னகை புரிந்த வண்ணம் நிதானமாய் மாடிப்படி வழியாக கீழே போய்க் கொண்டிருந்தாள்.