பக்கம்:பச்சைக்கனவு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ) லா. ச. ராமாமிருதம்

குடித்தேன். ஏன் அப்படிச் செய்தேன்? நானே அப்பொழுது அறியேன். உங்கள் மிச்சத்தை உண்டால் என் தாபம் தணியும் என்றா?"

என்னடீ தாrாயணி?” திரும்பிப் பார்த்தபோதுதான் அம்மா என் பின்னா மூல நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

எனக்கு ரொம்ப அசதியாயிருக்கே...' தம்பூரை அவசரமாய்க் கீழே இறக்கிவிட்டுப் பரிவுடன் அவள் தலையை மடியில் எடுத்துக்கொண்டான்.

வெகுநேரம் பேசிவிட்டாய். தூங்கு."

இல்லை, எனக்குத் தூக்கம் வரவில்லை. வராது. நீங்கள் தொடர்ந்து சொல்லுங்களேன்.'

என்னது?"

'நம் கதையை. உங்கள் வாய் மூலமும் நான் கேட்க இன்று எனக்கு ஆசையாக இருக்கிறது; இரண்டு குழந்தைகள் ஒன்றுக்கு ஒன்று கதை சொல்லி ஒன்றை ஒன்று துரங்கப் பண்ணிக் கொள்வதுபோல்.”

அவன் லேசாய்ச் சிரித்தான்.

அவள் குழந்தை மாதிரி அவனைத் தொந்தரவு பண்ணினாள். சொல்லுங்கோன்னா.'

அவள் மனம் இல்லாமல் இணங்குவதுபோல் பெருமூச் செறிந்தான்; பேசலானான்.

'அடுத்த நாள் மாலை நான் உங்கள் வீட்டுள் நுழைகையிலேயே, ஆபீஸ் அறையிலிருந்து உன் தகப்பனார் கூப்பிட்டார்.

ನಿಲ್ಲ-f பசுபதி, நான் திடீரென முடிவு செய்து விட்டேன். &T of பெண்ணிற்கு "டியூஷன் நிறுத்திவிடப் போகிறேன். இதோ உங்கள் சம்பளம்; மன்னிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/89&oldid=590747" இலிருந்து மீள்விக்கப்பட்டது