பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள், தேர்தல் நடவடிக்கைகளே மீண்டும் ஆரம்பிப்பதற்கு நிச்ச யிக்கப்பட்ட தேதி, நேரம், விவரங்கள் ஆகியவற்றை ஒட்டுச் சாவடி தலைமை அலுவலர், எலக்ஷன் அதாரிட்டிக்கு உடனடியாக அறிவிக்கவேண்டும். மேலே குறிப்பிட்டதைப் போன்ற ஒவ்வொரு விஷயத் திலும் ஒட்டுச் சாவடி தலைமை அலுவலர், மீண்டும் தொடர்கிற வாக்கெடுப்பு முடிவடைகிற வரையில், அந்தத் தேர்தலில் போடப்பட்ட வாக்குகளே எண்ணக் கூடாது. வாக்கெடுப்பை மீண்டும் தொடர நிச்சயிக்கப்பட்ட தேதியிலும் நேரத்திலும் எலக்ஷன் அதாரிட்டி, வேறு விதத்தில் உத்திரவிட்டாலன்றி மற்றபடி, துணே விதியின் விலக்கு நிபந்தனேயின்கீழ் வருகிற விஷயங்களில் தேர்தல் நடவடிக்கைகளே மீண்டும் தொடங்கி, மேலே கூறியுள்ள விதிகளில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையை ஒட்டுச் சாவடி தலேமை அலுவலர் அனுசரித்து அவற்றை நடத்த வேண்டும், - - 22. உறைகளைத் தயார் செய்தல் வாக்கெடுப்பு நிறுத்தப்பட்ட பிறகு, ஒட்டுச் சாவடி தலைமை அலுவலர், ஒவ்வொரு வார்டுக்காகவும் கீழ்க்கண்ட் பதிவேடுகளேத் தனித்தனியான உறைகளில் போட்டு தமது முத்திரையை இடவேண்டும். 1. உபயோகிக்கப்பட்ட வாக்குச் சிட்டுகள் ; 2. வாக்குச் சிட்டுகளே, வாக்காளர்களுக்குக் கொடுத் ததை அறிவிக்கும் அடையாளம் இடப்பட்டுள்ள வாக்காளர் ஜாபிதாவின் பிரதி ; 3. ரத்து செய்யப்பட்ட வாக்குச் சீட்டுகள் ; 4. வாக்குகளே எண்ணியது சம்பந்தப்பட்ட பதிவேடும் முந்திய விதிகளிலே குறிப்பிட்டுள்ள அறிவிப்பின் நகலும் உபயோகப்படாத வாக்குச் சீட்டுகளும் ; 5. பலவகை பதிவேடுகள் ; எல்லா வார்டுகள் சம்பந்தப்பட்ட உறைகளையும் கூடிய விரைவில் ஒட்டுச் சாவடி தலைமை அலுவலர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.