பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/819

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

333 45. வக்கீல நியமிப்பதும், கட்டணங்கள் செலுத்துவதும் விதிகள் அரசாங்கத்தாரும் பஞ்சாயத்து யூனியன் மன்றமும் ஒரு சிவில் வழக்கில் கட்சிக்காரர்களாயிருந்து, பஞ்சாயத்து யூனி யன் மன்றத்திடம் நிலைபெற்றுள்ள நிலங்களின் சர்வே சரியா யுள்ளதா என்பதுபற்றி வழக்கு சம்பந்தப்பட்டிருந்து, இரு வரின் ஒரே தன்மையுடையதாக இருந்தால், அரசாங்கத்தார் சார்பாகக் கலெக்டர் நியமிக்கும் வக்கீலேயே பஞ்சாயத்து யூனியன் மன்றம், தம் சார்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த விஷயங்களில், அரசாங்கத்தினரும் பஞ்சா யத்து யூனியன் மன்றமும் முறையே 2/3, 1/3, என்ற விகி தத்தில் அந்த வக்கீலுக்குக் கட்டணம் செலுத்தவேண்டும். 2. 1-வது விதியில் சொல்லியுள்ளவை நீங்கலான, சிவில் வழக்குகள் விஷயமாக, அரசாங்கத்தினரும் பஞ்சா யத்து யூனியன் மன்றமும் கட்சிக்காரர்களாக இருந்து, அவர் களது வாதங்கள் ஒரே மாதிரியாக இருந்தால், அரசாங்கத் தினர் சார்பாக நியமிக்கப்பட்ட வக்கிலேயே பஞ்சாயத்து யூனியன், தம் சார்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த விஷயங்களில், வக்கீலுக்குச் செலுத்தவேண்டிய கட்டணங் களும் வழக்கு சம்பந்தப்பட்ட இதர துனேச் செலவுகளும் அரசாங்கத்தினரின் சார்பாகவும் பஞ்சாயத்து யூனியன் மன் றத்தின் சார்பாகவும் நடக்கும் நடவடிக்கைகளுக்கு பிறகு ஏற்படும் செலவுகளும் அரசாங்கத்தாராலும், பஞ்சாயத்து யூனியன் மன்றத்தாலும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். 3. சிவில் நீதி மன்றங்களின் தீர்ப்புகளுக்கு எதிராக பஞ்சாயத்து யூனியன் மன்றங்கள் தாக்கல் செய்யும் அப்பீல் களுக்கு இந்த விதிகள் பயன்படமாட்டாது. 46. பஞ்சாயத்து யூனியன் காரியாலயத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்தல் 1. ஒரு அபிவிருத்தி வட்டாரத்தின் காரியாலயத்தில் தற்போது பணியாற்றும் ஊழியர். சமுதாய அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் வரையறுக்கப் பட்டுள்ள ஒவ்வொரு வட்டாரத்திற்காகவும், இந்திய அரசாங்