பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/892

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 வழக்கு: 5 சென்னே உயர்நீதி மன்றம் கனம் நீதிபதி வெங்கடாத்திரி அவர்கள் மனுதாரர் : கருப்பையா. எதிர்மனுதாரர் : ராமநாதபுரம் ஜில்லா கலெக்டர். விஷயம் பஞ்சாயத்துச் சட்டம் 26-வது பிரிவு-சட்ட விரோதமான கூட்டத்தில் பங்கு கொண்டதற்காக கோர்ட் கலேயும் வரை சிறை தண்டனே பெற்ற பஞ்சாயத்து தலேவர் அருகதை அற்றவர் ஆகிருரா? குற்றம் செய்யும் நோக்கத்தோடு கூட்டத்தில் ஒருவராக இருந்ததால் ஒழுக்கக் குறைவு உள்ளவ ராகி, அருகதையை இழந்து விடுகிருரா ? வழக்கின் சுருக்கம் மனுதாரர். 1958-ல் விளப்பனூர் பஞ்சாயத்து தலைவர். ஆளுர், ஒரு சிவில் தாவாவில், விளேந்த பயிர்களுக்கு கோர்ட்டால் ரிசீவர் நியமிக்கப்பட்டார். பயிர் அறுவட்ை யானதும் சேமித்து வைக்கப்பட்டது. கடன் செலுத்த வேண்டியவருக்கு காலகெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட தினம் ஆகியும் பணம் செலுத்தப்படாததால், ரிசீவர், போலீஸ் உதவியோடு நெல்லே எடுத்துப்போக நடவடிக்கை எடுத்தார். அப்போது, கிராமவாசிகள், ரிசீவர் தம் வேலையைச் செய்யவொட்டாமல் தடுத்தனர். அந்தக் கூட்டத்தில், பஞ்சாயத்து தலைவரும் ஒருவர். பஞ்சாயத்து தலைவர் உள்பட கிராமவாசிகள்மீது கிரிமினல் வழக்கு போடப்பட்டது. பஞ்சாயத்து தலேவருக்கு கோர்ட் கலேயும் வரை சிறை தண்டனே விதிக்கப்பட்டது. பூரீவில்லி புத்துரர், ஜில்லா முன்சீப், இந்த மனுதாரர், தாம் தண்டனை பெற்ற காரணத்தால் அங்கத்தினர் பதவி வகிக்கும் தகுதியை இழந்துவிட்டதால், அவர் பதவியை இழந்துவிட்டதாக உத்தரவிட்டார். தீர்ப்பின் சாரம் இந்த வழக்கில் தீர்மானிக்க வேண்டியது, மனுதாரர் பஞ்சாயத்துச் சட்டம் 26 (a) பிரிவின்கீழ் தகுதியற்றவர் ஆகி.