□ 211
அப்போதுதான் அவனுக்குத்தன் தந்தையின் ஞாபகம் வந்தது.
"என் தந்தை கேவலத்துக்கும் மானாபிமானத்துக்கும் அஞ்சித்தானே உயிரை மாய்த்துக் கொண்டார்? ஆம். இப்படிப்பட்ட அவலமான, கேவலமான நிலைமைக்கு ஆளாவதைவிட அவரைப் போல் உயிரை விட்டு விடுவது நல்லது.
"ஆனால் எல்லோருமா உயிரை விட்டுவிடுவார்கள்.?"
"அப்படியானால், மனிதர்கள் எதற்கு அஞ்சுகிறார்கள்?"
"உயிருக்கா? மானாபிமானத்துக்கா?"
"எது பெரிது? உயிரா? மானாபிமானமா.?"
"உயிரைப் பெரிதாக நினைக்கிறவன் மானாபிமானத்தைக் கைவிடுகிறான்; மானாபிமானத்தை மதிப்பவன் உயிரை விட்டு விடுகிறான்...
"எனக்கு எது பெரிது?."
"உயிரா? மானாபிமானமா."
யோசிக்க யோசித்துப் பார்க்கதில் அவனுக்கு இரண்டுமே பெரிதாய்த்தோன்றின.
"அப்படியானால் மானாபிமானத்தோடு உயிர் வாழ்வதஎப்படி?"
அதற்குத்தான் அவன் விடை தேடிக் கொண்டிருந்தான். அவனால் ஒரு வழியையும் காண இயலவில்லை . சிந்தித்துச்சிந்தித்து உடம்பையும், உள்ளத்தையும் அலுக்கச் செய்து கொண்டான். மாலை வரையிலும் அவன் ஒரு முடிவுக்கும் வரவில்லை. அமைதியும் காணவில்லை.