பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238


பொருட்படுத்தாமல்ஓடிப்போன ஒரு கோழையை எண்ணி உருகிக் கொண்டிருக்கிறாள்! நானும் இதை அனுமதித்துக் கொண்டிருக்கிறேன்.

'சே! இந்த நிலைமை நீடிக்கக் கூடாது; நீடிக்கவேகூடாது!'

சங்கர் ஏதோ தீர்மானித்து முடிவு கண்டவன் போல் திடீரென்று நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்தான்; மேஜை விளக்கைப் போட்டான்; படுக்கையை விரித்துப்படுத்தான்; தூங்கினான்.

காவையில் கமலா காப்பித் தம்ளரும் கையுமாக வந்து அண்ணனை எழுப்பினாள். சங்கர் திடுக்கிட்டு எழுந்து, உட்கார்ந்தான்; எதிரே கமலா. நிற்பதைக் கண்டான்; காப்பித் தம்ளரைக் கையில் வாங்கியவாறே, "என்ன கமலா?" என்று கேட்டான்.

"என்னண்ணா , நீ ராத்திரியே வந்துட்டியாமே" என்றாள் கமலா;

பிறகு அவனுடைய பதிலுக்கே காத்திராமல், "அண்ணா , அத்தானைப் பற்றி ஏதாவது தெரியுமா?" என்று கேட்டாள்.

சங்கருக்கு அந்தக் கேள்வியே நாராசம்போல் ஒலித்தது; தான் முடிவு கட்டி வைத்திருந்ததை அவளிடம் சொல்லியே விடுவது என்று தீர்மானித்தான்.

"கமலா, அப்படி உட்கார். நானும். உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும்னுதான் இருக்கேன்" என்று அர்த்த பாவத்தோடு கூறியவாறு காப்பியைக் குடித்து முடித்தான்.

கமலா அங்குகிடந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

"என்னண்ணா?"

சங்கர் குனிந்த தலைநிமிராமல்பேசினான்.

"கமலா, நான் சொல்றேன்னு நீ வருத்தப்பட்டுக்-