பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

பஞ்ச தந்திரக் கதைகள்


கொண்டது. நாள்தோறும் அந்தப் பயிர்க் கொல்லைக்குப் போய் மான் மேய்ந்து வரத் தொடங்கியது

தான் விதைத்து வளர்த்த பயிர் அழிந்து வருவதைக் கண்ட கொல்லைக்காரன், தன் பயிர்க் கொல்லையில் வலை கட்டி வைத்திருந்தான். வழக்கம் போல் மேயப் போன மான், அந்த வலையில் சிக்கிக் கொண்டது.

‘என் உயிருக்குயிரான காகமோ நரியோ வந்தாலொழிய என்னால் பிழைக்க முடியாதே’ என்று தயிரில் சுத்தும் மத்தைப் போல் மான் குட்டி மனத் துயரத்தோடு துடித்துக் கொண்டிருந்தது.

அப்போது அந்தப் பக்கமாக வந்த நரி, மான் வலையில் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, “என் நெடு நாளைய எண்ணம் இன்று நிறைவேறிற்று. இன்று நான் நிச்சயமாக இந்த மானின் எலும்பையும் தசையையும் சுவைத்துச் தின்பேன்” என்று மனம் மகிழ்ந்திருந்தது.

மான்குட்டி அதைக் கண்டவுடன், நரியண்ணா, நரியண்ணா! விரைவில் என்னை விடுவியுங்கள்’ என்று கதறியது.

“மானே, இன்று எனக்கு நோன்பு நாள். இந்த வலை தோல் வலையாக இருப்பதால், இன்று நான் இதைத் தொடவும் கூடாது. நாளைக்கு நான்