பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

பஞ்ச தந்திரக் கதைகள்

கோபத்தை ஆற்றப் பாடுபடுகிறேன்” என்று பல வாறாக உரைத்தது அந்த வெள்ளை முயல்.

இதைக் கேட்ட அரச யானை, நிலாவரசர் எப்போது இங்கு புனலாட வருவார் ஏன்று சொல். நான் நேரில் வந்து அவரிடம் வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு போகிறேன்’ என்று சொல்லிற்று.

சரி, அவ்வாறே செய்கிறேன்” என்று சொல்லி முயல் அன்றிரவு யானையைக் கூட்டிக் கொண்டு அந்த நீர் நிலைக்கு வந்தது. தெளிந்த நீரின் இ டையே தோன்றிய நிலவின் சாயையைக் காட்டி, அதோபார்!” என்றது.

அத்தச் சாயையைத் திங்கள் என்றும், அதைச் சுற்றித் தெரிந்த விண்மீன்களின் சாயையை, நிலா வரசனின் மனைவிமார் என்றும் எண்ணிக் கொண்ட யானை,' நிலாவரசே! எனக்கு இது தெரியாது. தாங்கள் புனலாடும் சுனையென்று தெரிந்திருந்தால் இங்கு வந்திருக்கவே மாட்டேன். தெரியாமல் வந்த என் பிழையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இப்போதே நான் என் இனத்தாரோடு திருப்பிப் போய் விடுகிறேன்’ என்று துதிக்கையைத் தூக்கி வணக்கமிட்டது. பிறகு அது மற்ற யானைகளை அழைத்துக் கொண்டு வேறு சுனையைத் தேடிச் சென்றுவிட்டது.

அதன் பின் முயல்கள் யாவும் முன்பு போல் சுதந்திரமாகவும் இன்பமாகவும் அந்தக் கானகத்தில் வாழ்ந்து வந்தன.