பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

பஞ்ச தந்திரக் கதைகள்


அதற்குச் சூரியன், 'முனிவரே என்னைக் காட்டிலும் பலவான் என்னை மறைக்கும் மேகம் தான் அவனுக்குக் கட்டிக் கொடுப்பதுதான் சிறப்பு" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

முனிவர் மேகத்தை அழைத்தார்.

மேகம் வந்து "ஐயா, முனிவரே என்னைக் காட்டிலும் பலவான், என்னைத் தூள்தூளாகப் பறக்கச் செய்யும் காற்றுதான். காற்றுக்கே கல்யாணம் செய்து வையுங்கள்" என்று சொல்லி விட்டுப் போனான்.

காற்றை அழைத்து முனிவர் தம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்னார்.

"என்னை மறைத்துத் தடுத்து விடும் சக்தி பெற்ற மலையைக் காட்டிலும் நான் பலவான் அல்ல! அந்த மலைக்கே உங்கள் பெண்ணைக் கொடுப்பது தான் பொருந்தும்" என்று சொல்லி விட்டுப்போய் விட்டான் காற்று.

மலையரசனை அழைத்துத் தன் மகளை ஏற்றுக் கொள்ளும்படி கூறினார் முனிவர்.

‘உலகத்தில் நான் என்ன பலவானா? என்னை அறுத்தெடுக்கும் எலியே பலவான். எலியரசனுக்கே இவள் ஏற்றவள்" என்று ஆலோசனை கூறி விட்டு அகன்றான் மலையரசன்.

முனிவர் எலியரசனை யழைத்தார்.