பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
117


'பிலாசபி நேசுரலிஸ் பிரின் சிபியா, என்பது அந்த நூலின் பெயர். ஹேலி அதைத் தெய்வீகப் படைப்பு’ எனப் புகழ்ந்தார்.

ஹேலியின் துாண்டுதல் மட்டும் இல்லாதிருந் தால் அந்த நூல் எழுதப்பட்டே இராது. 1686-ல் ஹேலிக்கு ராயல் சொஸைட்டியில் முக்கிய பதவி கிடைத்தது. 1689-ல் அவருக்கு நீா மூழ்குதலில் ருசி ஏற்பட்டது. நீர் மூழ்கும் சாதனங்களில் பல முன்னேற்றங்களைச் செய்தார்.

"டைவிங் பெல்' என்ற நீர் மூழ்கி சாதனம் ஒன்றைக் கண்டு பிடித்தார். அதன் செயல்பாட் டைக் கண்டறிய தாமே கடலில் மூழ்கினார்

நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைத் தத்துவம்; இந்தப் பேரண்டத்திற்கும் பொதுவானது; வால் மீன்களுக்கும் அதுவே ஆதாரம் எனக் கண்டறிந் தவர் ஹேலி! இவை மட்டுமின்றி—

ஹேலி, ஒரு பல்துறை மேதையாகத் திகழ்ந் தார். அவர் ஒரு வானியல் நிபுணர்; கணித மேதை; மாலுமி, சிறந்த மொழி பெயர்ப்பாளர்; கவிஞர்; பெளதீக விஞ்ஞானி; கடலியல் நிபுணர்; கால நிலை நிபுணர் என இப்படிப் பல துறைகளில் ஹேலி, தமது உழைப்பையும், முத்திரையையும் பதித்துள்ளார்.