"உரவோன் மருக 7 எனக் கரிகாலன் வழித்தோன்றலாகவே கூறுதலானும், கரீ காலன் நெடுமுடிக்கிள்ளிக்கு நெடிது முற்பட்டவனே யாமென்று துணியலாம். மாதவியினிளமையிற் பரிசிலீந்தானாக உரைகாரர் 'கொண்ட கரிகாலன் அவன் முதுமையில் இல்லாது போகிய செய்தியே சிலப்பதிகாரமும் மணிமேகலையுங் கூறாமல் ஒழிவன. ஒரு பெருங்கோவேந்தன் இறந்த செய்தியை இந்நூல்கள் கூறாமை வியப்பைத்தருவது. கரிகாலன் இறந்த செய்தி புறப்பாட்டில் (224) நல்லிசைப் புலவர் கருங்குழலாதனாராற் கூறப்பட்டுள்ளது கண்டுகொள்க. " அறிவுடையாள னிறந்தோன் மன்ற என்று கூறுதல் காண்க. சங்க நூல்கட்குஞ் சிலப்பதிகாரத் திற்கும் ஒந்த கரிகாலன் செய்தி "கழா அர் முன்றுறைத் தண் பத விழவு" ஒன்றேயாம். சிலப்பதிகாரத்திற் காணாது சங்க நூல்களிற் கண்ட கரிகாலன் பெருஞ் செய்திகள் "தாய் வயிற்றிருந்து தாய மெய்தலும்" "வெண்ணிப் போர் வென்றியும் வாகைப் போர் வென்றியும் செல் குடி நிறுத்தலும் பல் வேள்வி வேட்டலும் (பொருந.146-48) (புறம். 66 அகம். ) (அகம்.125 (அகம். (புறம்.397 என ஆகும் இச்செயல்கள் பட்டினப்பாலைத் தலைவற்குக் கூறப் படாமை நன்கு நினைக. இனிச் சிலப்பதிகாரத்து மனையறம் படுத்த காதை முகத்து அரும்பதவுரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் உடன்படாதொழிந்த ஒரேட்டின் பாடத்தில் திருவின் செல்வியொடு பெருவளவனைப் பாலை பாடிய பரிசிலன் றொடுத்த மாலைத்தாகிய வளங்கெழு செல்வத்து என்புழிக் கண்ட அடிகளிற் கரிகாலே திருமாவளவன் எளக் கூறியிருத்தல் காணப்படுவது, நல்லுரையாளர் இருவரும் உடன்
பக்கம்:பட்டினப்பாலை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/23
Appearance