இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
சிறிய கிண்ணியிலுள்ள தண்ணீர் பளபளக்கிறது. கடலிலுள்ள தண்ணீர் இருண்டு தோன்றுகிறது.
சிறிய உண்மைக்கு விளக்கம் கூறத் தெளிவான சொற்கள் இருக்கின்றன; பெரிய உண்மைக்குப் பெரிய மெளனந்தான் உண்டு.
தாரகைகள் எல்லாவற்றையும் இழந்த காலைவானத்தை நோக்கி, “பனிச் சொட்டை இழந்துவிட்டேனே” என்று பூ கதறுகிறது.
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀
30