பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

சிறிய கிண்ணியிலுள்ள தண்ணீர் பளபளக்கிறது. கடலிலுள்ள தண்ணீர் இருண்டு தோன்றுகிறது.

சிறிய உண்மைக்கு விளக்கம் கூறத் தெளிவான சொற்கள் இருக்கின்றன; பெரிய உண்மைக்குப் பெரிய மெளனந்தான் உண்டு.


தாரகைகள் எல்லாவற்றையும் இழந்த காலைவானத்தை நோக்கி, “பனிச் சொட்டை இழந்துவிட்டேனே” என்று பூ கதறுகிறது.

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

30