இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சங்கப் பாங்கும் சமயப் பங்கும் [...] 95
உயர்த்துதல் பெண்மையை இழப்பதாகும் என்று தயங்கி னார். தயக்கமே தோல்வியாயிற்று.
சிவன் கூத்தால் வென்றார்.
இது பட்டி மண்டப வாதில் ஒரு கூத்துப் பங்கு.
சமய வாத நெறிகள்
அறைகூவல் கொடி நடல்
சங்கப் பாங்கில் அறைகூவலின் அறிகுறியாகக் கொடி நடப்பட்டது . அப்பழக்கம் சமயப்பங்கில் அருகியது. அத்தினபுரத்துச் சாங்கியவாதியாகிய பூரணன்
“ஓங்க ஒரு கொடி நட்டு உரைக்கிற்பவன் ஆங்கண் எவர்க்கும் அளவு என்று” இருந்தான்.
‘எல்லோர்க்கும் அறைகூவலாகச் சொல்’ என்று கொடி நட்டான். சிலவே இவ்வாறு அமைந்தன.
ஆனால் வெற்றிபெற்றுப் பிடித்த கொடிகள் பல . ஞானசம்பந்தரையும் “நெடுங்கொடி முழங்க நாட்டிய” நீலகேசியையும் கண்டோம்.
“மதுரகவிராசன் நாளென்று வெண்குடை விருது கொடி தாள மேள தண்டிகை
வரிசையொ டுவரவு மால் அகந்தை தவிர்ந்திடாதோ'