பட்டி சொல், பெயர் ஆய்வு “ 147
பிங்கலம் காட்டிய முகரிமைப் பெயர் என்பதற்குப் பொருள் கூறுவது போன்று சூடாமணி நிகண்டு.
‘படு, மரக்குலையே கள்ளுப் பரவுநீர் நன்மைப்பேர்’
என்று முகரிமைப் பெயருக்கு நன்மைப் பெயர் என்று கூறியது.
இவற்றிற்கு இலக்கியமாகக் கந்தபுராணம், “முகரிமை படைத்தவன் தோல் முகத்தவன்”
என்று பாடியது. இங்கு தலைமைத் தன்மை கொண்டவன் என்று பொருள்.
எனவே படு என்பது பெயர்ச் சொல்லாக முகரிமை என்னும் பெயரில் நின்று பேரறிவு’, ‘தன்மை, தலைமை’ எனும் மூன்று சிறந்த பொருள்களைத் தருவதாகின்றது.
இப் பெருமைப் பொருள்களுடன் படு வைக் காணும் போது பட்டிமண்டபம் சங்கப் பாங்கில் பெருமையோடு திகழ்ந்தமைக்குச் சான்றாகிறது.
இத் தொடர்பால் முகரிமை ஒரு தாழ்வுப் பொருளிலும் திரு)ானசம்பந்தரால் பாடப்பட்டுள்ளது. முகரிமை என்னும் பண்புப் பெயரை முகரி என்னும் உயர்தினைப் பெயராக வைத்து
பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள்"