78 | பட்டி மண்டய வரலாறு
ஒரு நிலையில் குண்டலகேசி விடை சொல்லத் தயங்கினாள். மன்னன் இதனை உணர்ந்து,
“புயலிரும் (நீல கூந்தலி (கேசி)
பொருந்தச் சொல்லினாள்”
என்று அவையோர்க்கு அறிவித்தாள் அவையோரும் ஏற்றனர். வென்ற நீலகேசிக்குச்சிறப்புச் செய்தான்; தோன்ற குண்டலகேசியை,
“வட்டி கொள் பறைகொட்டி வழுவுரை பலகூறி வாரல்”
என்று பெட்டன (துன்பம்) பல செய்து பெருநகர் rv” விட்டுத் துரத்தச் செய்தான் நீலகேசி பரிசும்
கிருதும் பெற்றாள். -
வென்ற நீலகேசி குண்டலகேசியின் ஆசானான அருக்கசந்திரனுடனும், அவன் ஆசானான மொக்கல னுடனும், அவன் ஆசானான புத்தசமய மூலவரான புத்தருடனும் தொடர்ந்து வாதிட்டு அவரெல்லாரையும் சமணராக்கினாள் பூதவாதியுடனும் வாதிட்டாள். பராசரன் என்னும் முதியவனுடனும் வாதிட்டதாக உள்ளது. இவன் அத்ரைபுரத்தவன் . சாங்கியவாதி. இவர் களையும் சமணராக்கினாள். இவ்வாறு நீலகேசி பாடிற்று. அம்மதத்திற்காகத் தோன்றிய நூல் வேறெப்படிப் பாடும்?