118 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்
இன்ப துன்பங்களை விலக்க முடியும் என்பது உண்மையாகுமா? திரிபுரத்தை எரித்த சிவபெருமான் மண்டை யோட்டில் பிச்சை எடுத்தது தவத்திற்குரியதோ? இல்லை, பகலவனும் அம்புலியும் இராகு கேதுக்களால் மறைவதும், பின்னர் ஒளிர்வதும் எதன் பொருட்டு? வினைப் பயனால் அன்றோ? தீங்குகள் வருவதும் பின்னர் நீங்குவதும் ஊழ்வினையாலன்றோ? இந்திரன் அடைந்த துன்பங்களைக் கணக்கிட முடியுமா? இந்த விதியே சீதையைப் பிரித்தது. நான் சங்கரன் இந்த விதியே சீதையைப் பிரித்தது. நான் சங்கரன் வாளால் பட்டதும் சிதியின் பயனே, அரக்கர் களையைக் களைந்து வாழ்தி" இவ்வாறு விதியின் வலியை உணர்த்துகின்றான் சடாயு, பின்னர் வாழ்த்துகின்றான்.
வாலி சுக்கிரீவனுக்கு உறுதிகறும் போக்கில் விதியைப் பற்றிக் கூறுவான்:
அருமையென் விதியி னாரே
உதவுவான் அமைந்த காலை இருமையும் எய்தினாய் மற்று
இனிச்செயற் பாலது ? என்ற பாடலில் இதனைக் காணலாம். "உனக்கு ஆகூழ் வந்து வாய்த்தது. இனி நீ அடைதற்கு யாதுள்ளது? ஆதலால் இம்மை மறுமை இன்பங்களை யெல்லாம் நீ அடைந்து விட்டாய்” என்று உறுதி கூறுகின்றான். இந்த அறிவுரையில் உழ்ை தலைகாட்டுகின்றது.
வீடணன்-கும்பகருணன் சந்திப்பு பற்றிக்கூறும் கவிதைகள் கற்றவர்க்குக் கழிபெருங்களிப்பை நல்க
- $1 - تیبینیمه - - . - -
வீடணன் கும்பகருணனை இராமன் பக்கம்
28. ஆரணிய - சடாயு உயிர் நீத்த - 193 27. கிட்கிந்தை - வாலி வதை 28. புத்த. கும்பகருணன் வதை - 130-189