பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் 9 காரனாகவே அந்த வீட்டில் புகுந்து, பல ஆண்டுகள் உழைத்து, இன்னும் வேலைக்காரப் பையனாகவே இருக்கிறான். சம்பளத்தில் அதிகம் கூட வில்லை யென்றாலும், வீட்டைப் பாதுகாத்து, எசமானியும்மாளுக்குத் துணையாக இருந்து, எடுபிடி வேலை செய்யும் வேலைகள் தான் அதிகமாக் கூடி விட்டிருந்தன. மருந்தை வாங்க அனுப்பி வைத்திருந்த யசோதை, சமையலறைக்குள் புகுந்து, சகல காரியங்களையும் மிகவும் சிரத்தையுடன் செய்யத் தொடங்கி விட்டாள். வாசுதேவன் குளியறைக்குள் நுழைந்து கொண்டார். வீட்டில் ரேடியோ சத்தம் மட்டும் இசை பரப்பிக் கொண்டிருந்தது. - வேகமாக ஓட முடியாமலும், மெதுவாக நடந்து போக மனமில்லாமலும், உள்ளத்தால் வேகமாகவும்நடையில் மெதுவாகவும் ராமன் சாலையிலே போய்க் கொண்டிருந்தான். மருந்துச் சீட்டைக் கையில் வாங்கிக் கொண்டதும், அவனது மனதில் முதலில் நிழலாடிய நினைவு, அவனது மனைவி சீதையைப் பற்றித்தான். அவனது மனைவி பிய்ந்து கிடக்கும் தன் குடிசைக்குள்ளே, கிழிந்து