பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் * 39 வசதியும் ஏரியிலிருந்த தண்ணிர் வாய்க்காலில் வெளியேறிக் கொண்டிருப்பது போல் செலவாகிப் போய்க் கொண்டிருந்தது. தம்புசாமிக்கோ ஏரிக்குத் தண்ணிர் வந்து சேர்வது போல, உழைப்பினால் பணம் நிரம்பிக் கொண்டிருந்தது. அதனால், மேலும் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கினான் தம்புசாமி. சிவசாமிக்கோ இந்த சேதியைக் கேட்டதும் மனம்பொறுக்கவில்லை. - தன்னை ஏமாற்றி, பதுக்கி வைத்திருந்த பணத்தைக் கொண்டு தான், புதிதாக நிலம் வாங்கினான் என்று புதுப் பிரச்சினையைக் - கிளப்பி தமையனை ഖ് வம்புக்கு இழுத்தான். - s: Fo சிவசாமியிடம் சில்லறையும் Ll 6ND செளகரியங்களும் தினம் தோறும் பெற்றுக் கொண்டவர்கள், சிவசாமி சொன்னது உண்மைதான் என்று ஊரெங்கும் சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். அதிலும் பங்கு வேண்டும் என்று கேட்கும் படியும் சிவசாமியைத் தூண்டினார்கள். சிவசாமியும் கண்ட கண்ட இடத்தில் நின்று தன்னை தாய் தந்தை போலிருந்து வளர்த்து ஆளாக்கி, அண்ணனையும் அண்ணியையும்