பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை - - 7

இவ்வாறு, தன் கொற்றம், குணம், கொடை ஆகிய பண்பெலாம் தோன்றப் பாராட்டிய புலவர் பாக்களைக் கேட்டு மகிழ்ந்தான், செல்வக் கடுங்கோ, சிறு பரிசாக து:றாயிரம் கானம் அளித்தான்; அம்மட்டோடு நின்றானல்லன், கபிலரையும் உடன்கொண்டு நன்றா எனும் குன்றின் மீது ஏறி நின்றான். ஆண்டிருந்து காண்பார் கண்ணிற்குப் புலப்படும் நாடுகள் எவ்வளவுண்டோ அவ்வளவையும் அவர்க்கே அளித்தான். என்னே அவன் கொடைக் குணம்: - -