பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

சங்கத் தமிழ் நூல்கள் என்ற சிறப்பினுக்கு உரிய பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்ற தொகை வரிசையுள் நடுவண் வைத்து மதிக்கப் பெறுவது எட்டுத் தொகை. அது, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு. நூறு, பதிற்றுப் பத்து, பரி பாடல், கலித் தொகை, அக நானூறு, புறநானூறு என்னும் எட்டு நூல்களைக் கெரண்டது. அவற்றுள் நான்காவதாகிய பதிற்றுப் பத்து, சேர, சோழ, பாண்டியர் என்று தமிழ்நாடாண்ட மூவேந்தருள், முதற்கண் வைத்து மதிக்கத் தக்க ச்ேரர்குலக் காவலர் பதின்மர்' ஒவ்வொருவரையும், பத்துப் பத்துப் பாக்களால் தனித்தனியாக, பத்து புலவர்கள் பாடிய நூறு பாக்களைக் கொண்ட பெரு நூலாகும். அவற்றுள் இரண்டாம் பத்தும், பத்தாம் பத்தும் காணாமற் போகக் கிடைத்திருப்பன, எட்டுப் பத்துக்களே. -

அவற்றுள் இரண்டாம் பத்தில், இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனைக், குமட்டுர் கண்ணனாரும், மூன்றாம்.பத்தில், பல்யானைச் செல்கெழு குட்டுவனைப், பாலைக் கெளதம னாரும், நான்காம் பத்தில், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனாரும், ஐந்தாம் பத்தில், செங்குட்டுவனைப், பரண்ரும், ஆறாம் பத்தில், ஆடுகோட் பாட்டுச் சேரலாதனைக், காக்கைப் பாடினியார் நச்செள்ளையாரும், ஏழாம் பத்தில், செல்வக் கடுங்கோ