பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 67

வேள்வி அனைத்துமே புகழ் வாய்ந்தன.தாம். அங்கன மாகவும், இந்த வேள்வி, அரியவும், பெரியவுமாய புகழ் வாய்ந்த வேள்வி என, அந்தணர் எடுத்த வேள்வியையும், அத்தகு வேள்வி பல முடித்து மேலும் விளக்கம் பெற்ற - கேள்வி என அவ்வந்தணர்களின் கேள்விச் செல்வத்தையும் ஒரு சேரப் பாராட்டி நிற்கும் பெருமை, உரைசால் வேள்வி என்ற தொடருக்கு அமைந்திருக்கும் அருமை யுணர்ந்த ஆன்றோர் ஒருவர், இப்பாட்டிற்கு அத்தொட. ரையே பெயராகச் சூட்டிப் பெருமை செய்துள்ளார்.