பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் பத்து

19

தகையோனாகிய இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பத்துப் பாட்டுக்களாலே புகழ்ந்து பாடினர்.

அவை, ‘புண்ணுமிழ் குருதி’ முதலாக, ‘அட்டுமலர் மார்பன்’ ஈறாக விளங்குவனவாகும்.

அவற்றைக் கேட்டு மகிழ்ந்தான் அக் கோமான். அவற்றைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார்க்கு உம்பற்காட்டுப் பகுதியிலுள்ள ஐந்நூறு ஊர்களை இறையிலி நிலமாக வழங்கினான். அத்துடன், தென்னாட்டுள். தனக்கு வருகின்ற அரசிறையினும் ஒரு பங்கினை முப்பத்தெட்டு ஆண்டுகள் கொடுத்தான். இவன் ஐம்பத்தெட்டு ஆண்டுகள் அரசு வீற்றிருந்தான்.

சொற்பொருள் : பெரும்புகழ் - பெருமைக்குரிய புகழ். வாய்மொழி - சொன்னபடியே செல்லும் அரசாணை; சொல்லுஞ்சொல் தவறாத வாய்மையும் ஆம். வெளியன் - வெளியத்து வேளிர்குலத் தலைவன். வேண்மாள் - வேளிர்குடிப் பிறந்தவள். விற்பொறித்து - வில்லாகிய அடையாளத்தைப் பொறித்து; இது, அந்த எல்லைவரைக்கும் தன் மேல்ஆணைக்கு உட்பட்டது என்று உறுதிப்படுத்தும் வெற்றியின் அடையாளம். தமிழகம் - தமிழ் மொழி வழங்கிய அக் காலத்து நிலப்பகுதி; இது, செந்தமிழும் சொடுந்தமிழும் வழங்கிய பல்வேறு நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு சொல். ‘தகை சால் சிறப்பு’ சேரர்தம் குடித்தகுதியாலே மிகுந்த சிறப்பான போர்வினைத் திறம். ‘பேரிசை மரபின் ஆரியர் என்றது, ஆரிய வரசருள்ளும் பெரும் புகழுடைய அரச மரபினரான பேரரசர்களையும் வென்றான் என்பதற்கு. இதனால் பிறவரசர் தாமே பணிந்து திறை செலுத்தினராதலும் பெறப்படும். ‘நயனில் வன்சொல் யவனர்’ என்றது, வடமேற்கு எல்லைப் பகுதியினை அந் நாளிலே வலிந்து கைப்பற்றிக் கொண்டிருந்த கிரேக்கராகிய யவனரை. இது, இவர் சேரமானுக்குப் பணிந்து போகாது, கொடிய சபதங்களைக் கூறி எதிர்த்து, முடிவில் போரிலே தோற்ற நிலையைக் காட்டுவது ஆகும். ‘பிறர்’ என்றது. தனக்கு உட்படாதவரான பிறநாட்டு அரசரை; இவர் பாரதப் பரப்பிற்குப் புறத்திருந்தவராகலாம். அணங்கு - அச்சம். நோன்மை - வலிமை. ‘நோன்தாள்’ எனச் சேரனின் வெற்றிப் பெருமிதம், அவன் தாள்மேலாக ஏற்றிக் கூறப் பெற்றது.