பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

பதிற்றுப்பத்து தெளிவுரை

296 பதிற்றுப்பத்து தெளிவுரை

அவன் குளிர்ந்த இனிய மென்மையினன் என்பதனையும் இப்போது யானும் அறிந்தேன்!

சொற்பொருளும் விளக்கமும் : உறல் உறு குருதி-ஒழுகுதல் உறுகின்ற குருதி; குருதி.செந்நீர். புலவ-புலால் நாற்றம் எழ. அமர்க்கிடந்த ப்ோரிலே வஞ்சியாது எதிர்நின்று வெற்றி பெற்ற வெந்திறல் - கோடிய போர்த்திறல். தடக்கை . பெரிய கை. பொறையன் - பொறையர் மரபினள். வெருவர - அஞ்சும்படியாக. ஆடுஉ - ஆண்மகன். 'மட்." ஒழியிசைப் ப்ொருளில் வந்தது; இப்போது அவ்வெண்னம் ஒழிந்தது என்பதாம். நனந்தலை பரந்த இடம். இல்லோர் . பாருளற்ருேர்; வறியவர். புன்கண் - துன்பம். நாடல் , ஆராய்தல். சான்ற - அ ைமந் த. ஆடுநடை - வெற்றி யொழுக்கம். கழை - ஒடக்கோல். குட்டம் - ஆழம். பூங்குழை - அழகிய குண்டலம் என்னும் மகளிர் காதணி. வானி - ஒர் ய்ாறு; சேரநாட்டது. சாயல் . மென்டிை.

வானியாற்றுத் தெளிந்த நீரின் தன்மையும் தெளிவும் போல, இளஞ்சேரலும் இரவலர் பாடுநர்மாட்டுத் தண்ணளி யும் அன்பும் உடையவன் என்பதாம். பகைவருக்கு வெம் மையாளனுகிய அவன் எம்போல்வாருக்கு அன்பினளுதல் யும் கண்டேன் என்பதுமாம்.

87. வெண்தலைச் செம்புனல்!

துறை : விறலியாற்றுப்படை வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : வெண்தலைச் செம் புனல். இதஞ்ற் சொல்லியது : இளஞ்சேரலின் அருட் சிறப்பு.

lլ பெயர் விளக்கம் : 'வெண்தலைச் செம்புனல் என முரண் படக் கூறியவற்ருனும், முன்னின்ற அடைச்சிறப்பானும் இப் பெயரைத் தந்தனர். சென்மோ பாடினி என விறலியை ஆற்றுப்படுத்திக் கூறலால் விறலியாற்றுப்படை ஆயிற்று.)

சென்மோ பாடினி நன்கலம் பெருகுவை

'சந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து

தெண்கடல் முன்னிய வெண்தலைச் செம்புனல்

ஒய்யும் நீர்வழிக் கரும்பினும்

வல்வேற் பொறையன் வல்லல்ை அளியே