பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி : மூன்று ஊட்டம் பூரணத்துவம் பெற்ற அழகான அமைதிக்கு அந்தப் பங்களாதான் பிறப்பிடம் என்று சொல்லும்படியாக, அங்கே அப்பொழுது அத்துணே அமைதி அவ்வளவு அர்த்தத்துடன் கோலோச்சிக் கொண்டிருந்தது. அது மட்டுமின்றி, அப்பெரு மனேக்குச் சூட்டப்பெற்ற 'மங்கள விலாசம்’ என்னும் பெயரும் சேர்ந்து, அச்சூழலின் சாந்தியை இரட்டிப்பாக்கிக் கொண்டிருந்தது. அந்திப் பொழுதின் செளந்தர்யமே அம்மனைக்கு வாய்த் திட்ட உபாசனப் பொருள்போன்று, அவ்வளவு பவித்திர மான-மங்களகரமான அழகுக் கவர்ச்சியுடன் விளங்கியது. இத்தகைய இயற்கையின் இன்ப நுகர்ச்சி கண்களில் படிந்ததே தவிர, கருத்தில் படியவில்லை. படிந்திருந்தால், செந்தில்நாயகம் ஏன் இப்படித் தவித்துக்கொண்டிருக்கப் போகிருர் ? புரண்டு புரண்டு படுத்தார் அவர். அவருடன் அவரது நெஞ்சத்து எண்ணங்களும் புரண்டு புரண்டு படுத்தன. சுவரின் கடிகாரம் தொங்கியது. அது மணி காட்டு வதுடன் கிற்காமல், தேதியையும் காட்டவல்லது. செந்தில் நாயகத்தின் விழி விரிப்பில் படர்ந்த அத்தேதி அவருக்கு அயர்வைத் தந்திருக்க வேண்டும். காலத்தின் நடந்த கதை அவருள் மன உளேச்சலே விளைவித்திருக்கக் கூடும்.