பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

நெஞ்சு வலித்தது.

புகைச்சல் இருமல் வந்தது.

அரைக்கணம் கழிந்திருக்கலாம்.

'ட்ரங்கால்' ஒன்று அவருக்குப் பெங்களூரிலிருந்து வந்தது. செய்தியை வாங்கிக்கொண்ட செந்தில் நாயகத்தின் உயிர்த் துடிப்பு துரித கதியில் அடித்துக்கொண்டது. 'மங்களம்...மங்களம்...'என்று அவர் தம்முள் வேதனையுடன் பரிதாபமாகச் சொல்லிக்கொண்டார்.

சுடுநீர் ஊற்றெடுத்தது.

"மங்களத்துக்கு உடல்கிலே கவலைக்கிடம்!" இது செய்தி !