பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


தாளே எடுத்து அவனிடம் நீட்டினள். அவனுக்கு, காண்பது கனவல்ல என்ற மெய்யுணர்வு உண்டாவதற்குச் சில நிமிஷம் ஆகத்தான் செய்தது. அந்த அச்சுத்தாள் காட்டிய விவரம் என்ன, தெரியுமா ? 'கம் செந்தில் நாயகம் அவர்கள் செல்வத்தால் மட்டு மல்ல, குணகலன்களாலும் குறிதவருப் படிப்பாலும் சிறந்து விளங்குகின்றவர். ஆகவே, நம் கல்லூரிப் பேரவையின் தமிழ்ப் பிரிவுத் தலைமைப் பதவிக்கு இவரைவிடச் சிறந்த கபர் கிடைப்பது துர்லபம். வாய்த்த சந்தர்ப்பத்தை நழுவ விடா மல், நம் வகுப்புச் சோதரர்களும் சோதரிகளும் திரு எம். செக் தில் நாயகத்துக்கே உங்கள் மேலான வாக்குகளைப் போட்டு ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இங்கனம், Sr. uirustspf.” உணர்ச்சி வசப்பட்ட செந்தில்நாயகம் மிகுந்த அன்பு பாராட்டி நன்றி தெரிவித்தார் யாயினிக்கு. ‘என்பால் உங் களுக்கு இருக்கக் கூடிய இந்த கல்லெண்ணத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனே ?......எல்லாம் ஆண்டவன் சித்தம் !.என் மீது இருக்கும் உங்களது மாசு மறு வற்ற அன்பைக் கட்டிக் காப்பதில் கான் எப்போதும் கவன முடன் இருப்பேன் ' என்ருன் அவன். யாமினி உழைத்தாள். அவள் உழைப்பு செந்தில் நாயகத்திற்கு வெற்றி சொன்னது. அன்று தொட்டு, இருவரும் உளம் தொட்டுப் பழகினர் கள். அவளுக்கு உறையூர்தான் பிறப்பிடம். அவனே தஞ்சா ஆர்க்காரன். அவன் செல்வச் செழிப்பில் மலையாகி நின்றன். அவளோ, ஒரு பள்ளி உபாத்தியாயரின் ஒரே பெண். மகளைப் பட்டத்துடன் பார்க்க விழைந்தது தந்தை மனம். இருவரும் ஒருவரை யொருவர் நேசிக்கத் தலைப்பட்டனர். அன்பில் உள்ளம் தொட்டுப் பழகிய பழக்கம், தேசத்தில் கொணர்ந்து நிறுத்தியது. இயல்பான பரிணாம வளர்ச்சி