இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இந்த நாடகத்தில் பாடல்களுக்கிடையில் உள்ள உரைநடைப் பகுதிகள் சிலவற்றால் உரைநடை பற்றியும் நாட்டு நிலை பற்றியும் அறிகின்றாேம்.
(1) ௬வது பக்கம், ௫ வது வரியில் சேர வேண்டிய நோட்டு,
குடிகளுடைய சவுக்கியத்துக்காகக் குடிகிணறுகளை மராமத்துச் செய்யச் சர்க்காரில் ௫௰–௬௰ ரூபாய் கொடுத்த போதிலும் வீட்டுக்கொரு ஒட்டன் வெட்டிக்கு வந்து வேலை செய்து போகிறதுண்டு. ௲௮௱௪௰௪ ஆகஸ்டு ௴ ௮௨ ரிவின்யூ போர்ட்டு சர்க்கியுலர் உத்தரவினால் கூலிக்காரரைப் பலவந்தமாகப் பிடித்து வேலைவாங்கிவரும் வாடிக்கையை நிறுத்தக் கட்டளை. ௲௮௱௪௰௨ ௵ மே ௴ ௯௨ உத்தரவினல் தண்டு சரபராவுக்கு வண்டிக்காரரைத் தொந்தரவுபடுத்தக் கூடாது. வாடகை சரியாயும் தாமசமில்லாமலும் பட்டவாட செய்யக் கட்டளை.
(2) ௮-வது பக்கம், ௰௪-வது வரியில் சேரவேண்டிய நோட்டு, ௲௮௱௫௰௬ ௵ மே ௴ ௪௨ ரிவினியு போர்ட்டு சர்க்கியுலர் உத்தரவினால்