பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிர்த்தவம் ஏக்கப் பெருமூச்சா ! இன்னிசைப் பாட்டா ! கண்ணிர்த் தவங்கள் கடைப்பிடித்து நான்வளர்த்த பன்னீர் வரங்களைப் பறித்தெடுத்துச் சென்றவரார்? அரும்பி மலராத ஆசையை எரிப்பதற்கு... பண்ணிற் கலந்த இக் கண்ணிர் வரிகள் என்றன் செவியில் இடறி விழுந்தன ; வேதனைத் தூண்டில் விழுந்ததென் நெஞ்சில் : இதய நரம்பைப் பறித்தெடுத் தெவரோ உதய ராகம் மீட்டுகின் ருரே ! ஏக்கப் பெருமூச்சை இன்னிசைப் படுத்திப் பாக்க ளாகப் பாடுகின் ருரே ! இசையில் என்னை இழந்தப் பாடலை அசைபோட்ட வண்ணம் மெதுவாய் நடந்தேன். கண்ணிர்த்தவம் பனி-1