பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருக்கொண்ட நிலையில் ஒரு பெண், 'பொன்னுடல் காரி யின்று பொருளுடல் காரி யானேன் , என்மடி கனத்துப் பார இளநீர்த்தெங் காகி விட்டேன்." என்றுரைப்பதிலே நல்லதொரு நயம் மிளிர்கிறது. "பண்மொழி : கவிஞ ரைப்போல் படைப்பாற்றல் கமக்குத் தானே?" என்னும்போது கவிஞர்களும் பெண்களும் படைப்பாற்றல் உடையவர் என்று கூறுவது மிகப்பொருத்தம். தமிழைப் பற்றிய அரிய கருத்து : "திங்கள் வாழ் மண்டி லத்தில் தென்ஞப் பிரிக்க காட்டில் துங்குவாழ் மலேயா சாவா தொலைவு மோரீசில், மற்றும் எங்குவாழ் கின்ற போதும் இத்தமிழ்க் குலத்தைச் சேர்க்கும் சங்கிலி தமிழே என்று சாற்றுவாய் அன்புத் தோழி!' 146 பனித்துளிகள்