பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

☐ ☐ ☐ பதிப்புரை


கவிஞர் முருகுசுந்தரம் அவர்களைத் தமிழகம் நன்கறியும். நுண்மாண் நுழைபுலச் செவ்வியர் : கற்பனையுலகின் கற்புனைவாளர் ; பாவேந்தர் பாசறையில் கயந்துறைந்து உரம் பெற்ற ஒண்மையர் : இந்நாள் தமிழகப் பாட்டரங்கில் முந்தியிருக்கும் மொய்ம்பினர் ; இவரின் கவிதைக் கணிகள் மொழி, இனம், நாடு என்ற உணர்வுக்கு ஊட்டச்சத்தாய் அமைவன கவிதைச் சுவைஞர்கட்குக் கணுவிலாக் கரும்பு. இந்நூல் அரிமாவின் முதல் முழக்கம் , சிப்பி ஈனுவதோ முத்து ! எங்கள் பதிப்பகம் வெளியிடுவதோ இலக்கிய முத்துக்களே. தமிழகத் தன்னுணர்வு எழுச்சிக்கு அரிமா ஆற்றல் வேண்டி கிற்கிறது. எங்கள் முதல் வெளியீடாக வெளிவர தம் நூலையளித்த பாவலர்க்கு நன்றியுடையோம். "பாண்டியன் பவனி' என்ற பெயரில் இக்கவிதை நூலுக்கு ஓர் அணிவகுப்பை கடத்திக் காட்டியுள்ள இளம்பேரறிஞர் டாக்டர் ஒளவை நடராசஞர்க்கு எம் இதய கன்றியை குவிக்கின்ருேம். பனித்துளிகள் கவிதைச் சுவைஞர்கள் கையில் கணிக்குலை, சுவைக்க வாரீர்” என்று அழைக்கின்ருேம். தி. பி. 2005 அன்புடன் சேலம்-3 அரிமாப் புலவர்