பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430

பன்னிரு திருமுறை வரலாறு


ளினும் வேறுபாடுடையதாகி வருவது கொச்சக ஒரு போகாகும் என்பது மேற்காட்டிய நூற்பாவின் பொரு ளாகும்.

பல மடிப்புக்களையுடையதாய் அடுக்கியுடுக்கும் உடைவகையினேக் கொய்சகம் எனவும் கொச்சகம் என வும் வழங்குவர். கொய்சகம் என்னும் பெய ருடைய அவ்வுடை போன்று சிறியனவும் பெரிய னவும் ஆக விரவி அடுக்கியும் தம்முள் ஒப்பஅடுக்கியும் வரும் செய்யுள் வகையினேயே ஆசிரியர் தொல்காப்பி யனர் கொச்சகம் என்ற பெயராற் குறித்தார் என்பது பேராசிரியர், நச்சினர்க்கினியர் முதலிய உரையாசிரி யர்களின் கருத்தாகும். கொச்சக வொருபோகு என் னும் செய்யுள் விகற்பங்களைக் குறித்துப் பேராசிரியர் கருத்தினேயொட்டி நச்சிர்ைக்கினியர் கூறிய விளக் கங்கள் இங்கு நோக்கத்தக்கனவாகும்.

'தரவின்ருகித் தாழிசை பெற்றும்’ என்பது, தனக்கு இனமாகிய வண்ணகத்திற்கு ஒதிய தரவு இன்றித் தாழிசையே பெற்றும் (என்பதாம்). அவை பரணிப் பட்டாகிய தேவபாணி முதலியன. இது தரவொடுபட்ட தாழிசையிலக்கணமின்றி வேருய் வரும் என்ற தற்குத் தரவின் ருகி’ என த் தரவை விலக் கினர்....இனி பத்தும், பதினென்றும், பன்னிரண்டும் ஆகி ஒரு பொருள்மேல் வரும் பதிகப்பாட்டு நான்கடி யின் ஏருது வருதலும், அங்ங்னம் வருங்கால் தாழ்ந்த ஒசைபெற்றும் பெருதும் வருதலும், அவை இருகீர் முதல் எண் சீரளவும் வருதலும் என்றும் இன்னே சன்ன பலபகுதியெல்லாம் வரையறையின்றித் தழுவப்பட் டன. இவ்வேறுபாடெல்லாம் உளவேனும் தாழம்பட்ட ஓசை பெரும்பான் மையவாதலின் தாழிசையென்ருர், இங்ங்னம் தாழிசைப்பேறு விதந் தோதவே ஒழிந்த உறுப்பெல்லாம் விலக்குண்டமை பெற்ரும்” எனவும்

1. தொல் - செய்யுளியல் i49-ஆம் சூத்திரம், நச்சி

ஞர்க்கினியர் உரை.