பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568

பன்னிரு திருமுறை வரலாறு


இங்ங்ணமே தேவார ஆசிரியர்கள் காலத்தும் தென்னாட்டுத் திருக்கோயில்களில் இறைவனே ச் சேவித்துத் தெய்வப்பாடல் பாடும் மகளிர், இனிய இசை மொழியும் உடல் வனப்யும் தூய்மையும் நற்குணங்களெல்லாவற்றுக்கும் இடனுகிய உள்ளத் தூய்மையும் ஒருங்குடைய ராய், எல்லாம்வல்ல முழு முதற் கடவுளது அருள்மேனி வண்ணங்களும் வரம்பி லாற்றலும் நலம்வளர் ஞானவுரைகளும் ஆகிய பெருஞ் சீர்த்திகளைப் பொருளாகக்கொண்ட இன்னிசைச் செழும் பாடல்களே இறைவன் திருமுன்னர்ப் பாடிப் போற்றிஞர்கள். இச்செய்தியினே,

  • பண்ணினல்ல மொழியார் பவளத்துவர் வாயினுள் எண்ணினல்ல குணத்தார் இணைவேல்வென்ற

கண்ணிஞர் வண்ணம்பாடி வலிபாடித்தம் வாய்மொழி பாடவே அண்ணல் கேட்டுந்தானும் ஐயாறுடை ஐயனே

[2–6–4] என வரும் திருப்பாடலில் ஆளுடையபிள்ளேயார் அழ குறக் குறிப்பிட்டுள்ளார்.

龄》

பண்ணுர்ந்த பாடல்களால் இறைவனேப் பாடிப் போற்றுதலாகிய இத்திருப்பணி யாவராலும் விரும்பி மேற்கொள்ளத்தக்க எளிமையும் இனிமையும் ஒருங் குடைய தென்பதும், இவ்வினிய சாதனத்தை மேற் கொள்ள மனமில்லா தார் இதனின் மிக்க மற்றைத் தொண்டுகளே மேற்கொண்டு பத்தி செய்ய இயலா தென்பதும் அருள நுபவமுடைய அடியார்களின் துணி பாகும்.

' பத்தகுய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ

எத்திருற் பத்திசெய்கேன் என்னே நீ யிகழவேண்டா ?? என அப்பரடிகள் தில்லேச் சிற்றம்பலவனே யிறைஞ்சிக் கூறும் இவ்வேண்டுகோள், இறைவன் பாற் பத்தி