பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் சிவநெறிக்கொள்கை 345

தக்கதாகும். உலக நுகர்ச்சியிற் பதிந்த உணர்வோடு நிற்கும் உயிர்க்குச் சிவம் விளங்காது ; சிவபோகத்திற் றிளேக்கும் உணர்வோடு கூடிய உயிர்க்கு உலகம் தோன்ருது. இவ்வாறு கட்டு நிலையிலும் வீட்டு நிலையிலும் இருதிறப்பட்டுச் சார்ந்ததன் வண்ணமாதல் உயிரின் இயல்பு என்பது,

மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதற்பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே. (திருமந்திரம்-2290) என வரும் திருமூலர் வாய்மொழியால் நன்கு தெளியப் படும். உயிர் சார்ந்ததன் வண்ணமாந் தன்மையது என்பதனை,

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்ருகு மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு' (திருக்குறள்-452) எனத் திருவள்ளுவர் பொது முறையிலும்,

யாதொன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று

பந்தமறும் பளிங்கனைய சித்து நீ"

(ஆகாரபுவனம்-சிதம்பர ரகசியம்) எனத் தாயுமானுர் சிறப்பு முறையிலும் வைத்து அறி வுறுத்தியுள்ளமை இங்கு நினைக்கத்தக்கதாகும்.

சிவ வுணர்வாய் நிற்றல் என்பது, மலம் மாயை கன்மங் களில் ஒன்றினிடத்தும் ஒரு சிறிதும் நினைவு செல்லாமல் உயிராகிய தன்னையும் நினையாமல் சுட்டுணர்வு அறச் சிவம் ஒன்றையே நினைந்திருத்தல். இங்ங்னம் சிவவுணர்வில் தலைப்பட்டிருக்கும் உயிர், இறைவனது திருவடி ஞானத் தால் சிவமேபெறுந் திருவுடையதாகத் திகழுந் திறத்தினை,

திருவடி ஞான ஞ் சிவமாக்குவிக்கும் (திருமந்திரம் - 1598) எனவரும் தொடரில் திருமூலர் தெளிய விளக்கியுள்ளமை காணலாம்.

" தற்சேட்டை கெட நின்றதே சிவாநுபவம் என்ப தற்குப் பிரமாணம், தேவாரத்தில், தன்னை மறந்தாள் தன்னுமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே என்பதும், திருவாசகத்தினும்

ஊன் கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டென் உள்ளமும் போய் நான் கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ