பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமந்திர நூலமைப்பு 439

உள்ளுணர்வான ஞான முதலிய ஒரு நான் குண்மை தெள்ளுதிந் தமிழாற் கூறுந்திருமூலர் எனவும்,

நலஞ்சிறந்த ஞானயோகக் கிரியா சரியையெலாம் மலர்ந்த மொழித் திருமூலதேவர் எனவும் இந்நூலாசிரியரைக் குறித்தும்,

ஞானமுதல் நான்குமலர் நற்றிருமந்திரமாலை

என இந்நூலைக் குறித்தும் சேக்கிழாரடிகள் சிறப்பித்துப் போற்றுதலால் இனிது விளங்கும் ஞானமுதல் நான்கு மலர் நற்றிரு மந் திசமாலே ' என்றமையால், ஞான நன் னெறி பினை விளக்கும் முறையில் ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் ஆகிய நால்வகை நன்னெறிகளையும் திருமூல தேவர் இத்திருமந்திரப் பனுவலின் அருளிச் செய்துள்ளார் என்பது இன்கு புலனும்

சிவாகம உண்மைகளே உலக மக்களுக்கு அறிவுறுத்த வந்த திரு முலர், தாம் கூறும் மந்திரப்பொருளை மக்கள் அனைவரும் விரும்பிக் கேட்பதிலும் கேட்டு அவ்வழியில் ஒழுகிப் பயன் பெறுவதிலும் மனவெழுச்சியும் உறுதிப்பாடும் உடையராதற் பொருட்டுத் தாக் இந் நூல் வாயிலாக உணர்த்த எடுத்துக்கொண்ட வேத சிவாகமப் பொருள் ஆகளின் சிறப்பும், கமப்பொருள் தமக்குக் கிடைத்த வழி முறையும், தாம் கேட்டுணர்ந்த ஆகமப்பொருளைத் திருமந் திரமாலையாகத் தமிழிற் சொல்ல நேர்ந்த காரணமும் என இந்நூலைப் பயில்வோர் இன்றியமையாது முதற்கண் அறிந்துகொள்ளுதற்குரிய செய்திகளை அறிவுறுத்தும் முறையில் அமைந்தது திருமந்திரத்தின் முதற்கண் உள்ள பாயிரப் பகுதியாகும்.

வேதம் ஆகமம் ஆகிய இருவகை நூல்களும் இறை வனுல் அருளிச் செய்யப்பட்ட அருள் நூல்களாகும். இவற் றுள் ஒழுக்க நெறியினை விரித்துரைப்பதாகிய வேதம் பொதுநூல் எனப்படும். மெய்ந்நெறியாகிய சிவநெறி யினை அறிவுறுத்துவதாகிய சிவாகமம் சிறப்பு:நூல் எனப் படும். இங்கு வேதம் என்றது வேதசிரம் எனவும் வேதாந் தம் எனவும் ப்ோற்றப் பெறும் ஞானபாதங்களாகிய உப நிடதங்களே என்பர்.பெரியோர்.